செவ்வாய், 5 ஏப்ரல், 2011

புலம்பலாய்!!

கிராமத்திலே
இனவாத சூனியங்களும் 
பயங்கரவாத சூழல்களும்
மனதை வெறிச்சோடியதாக்கும்.

வாழ்வில் ,
நிச்சயமில்லாத்தன்மை
புற்று நோயாகும்.

நிம்மதி வாழ்வை
எதிர்பார்த்தவாறு
நாங்கள் இன்னுமே
முகாம்களுக்குள்...
அகதிகளாய் பரிதவிக்கிறோம்!

பிட்டும் தேங்காய்ப்
பூவுமாய் வாழ்ந்தவர்கள்
கீரியும் பாம்புமாய் மாற
வேதனைகள்
கொழுந்து விட்டு எரியும்..!

அன்று
எங்கள் தோள்களை தட்டி
ஒரு பாத்திரத்தில்
தேநீர் அருந்தி மகிழ்ந்தவர்கள் தான்
இன்று அட்டைகளாய்
எங்கள் உதிரத்தையே
உருஞ்சுகிறார்கள்.

ஒவ்வொரு மூச்சிக்களும்
சுவாசத்தை வெளியேற்ற
அடி மனதிலோ-பயம்
கறையானாய் அரிக்கும்..!

துப்பாக்கித் தோட்டாக்களின்
சத்தங்களுக்கு மத்தியில்
நாங்கள்-
சுதந்திரத்தை நாடுகிறோம்!

ஆனாலும்
மனித உயிர்களுக்கு
உத்தரவாதமில்லை.

நாய்களுக்கு உள்ள
மதிப்புக் கூட
மனிதர்களுக்கு இல்லாத நிலை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக