ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

மன ஓலங்கள்....

புழுதி கெழம்பிய தீச் சுடரில்
உடம்புகளின் தடவல்களுடே
மானிடம் சிந்திய வியர்வையின் துளி!

வரண்ட பூமியில்
பிறந்து விட்ட
கிழக்கிலங்கை மனிதர்களின்
மன ஓலங்கள்
எங்கோ......
எப்போதோ...
கேட்குமென்ற வேதனைகளின்
அவலங்கள்-
கண்களின் அருவியில்
கரை புரண்டிடும் ஆறு! கடல்!!

நிம்மதி மூச்சின்
சுவாசங்களும்.......
வேகங்களும்.....
தாகங்களும்....

எங்கள் இயற்கை அழிவுகளில்
தடவிய (தென்றல் ) காற்று!
இறைவா....! எம் வாழ்க்கைப் பயணங்களில்
உன் சோதனைகள் நிறைந்த,
வேதனைகளை-
விடாது காப்பாற்றுவோம் எப்போதும்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக