சனி, 16 ஏப்ரல், 2011

படிப்பீர்..!!!

எழுவீர் மாணவ மாணவிகளே...!!
நன்றாய்க் காலைக் கடனை முடிப்பீர்!
தொழுவீர் இறையோன் அருளை நாடி!
தொடர்வீர் பாடம் தனை தேடி!

கல்விச் செல்வம் கடலாகும்!
கையளவதனைக் கற்றாலும்!
நல்ல அறிவோ ஊற்றாகும்!
அள்ள அள்ள பெருக்காகும்!

தாய் தந்தை யாரை மதிப்பீர்!
ஆசான் தன்னை கனஞ் செய்வீர்!
வஞ்சகமில்லா உள்ளம் பெறுவீர்!
கல்வி அருளை பெற்றிடுவீர்!

புத்தக மென்னும் தென்றலில்
தடவி யறிவை சுவாசிப்பீர்!
நிந்தமும் தூய மனங் கொண்டே!
மண்ணில் வாழ்வீர்!வளம் பெறுவீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக