செவ்வாய், 5 ஏப்ரல், 2011

போவதும் வருவதுமாய்..!

நித்தமும்
கழுவி சுத்தப்படுத்திய
மேனி யெல்லாம்
காயங்களும்! கீறல்களும்!!

சப்பாத்துக் கால்களின்
அடையாளங்களும்
துப்பாக்கிக் கரங்களின்
வேட்டுத் தோட்டாக்களும்
என்-
முற்றத்து மணல் களிலெல்லாம்

சமாதானப் பேச்சு
தடைப்பட்டுப் போச்சு..!

என்-
தூய மனதில்
வேதனச் சுவடு;
இன மத-
பேதமென்றில்லை!

என்ன கொடுமை இது!
மனிதர்களை மனிதர்களே
கொன்று குவிக்கும்
விதம்...
தேசம் முழுவதும்
அச்சங்கள்..! பீதிகள்!!
தேயிலை சாயத்துக்கு
குருதி கலந்தாற் போல்..!

உயிர்-
தினம்...தினம்...
உடலை விட்டுப்
போவதும்! வருவதுமாய்..!!

இவற்கு-ஓர்
தீர்வு இல்லையா....?

இறைவா;
தேசத்தை
தேனிலும் இனிமையாக்கு!
அல்லது-
சுனாமியிலும் கொடுமையாக்கு!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக