ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

அல்-குர்ஆன்...!!

அருள் பொலியும் குர்ஆன்! இஸ்லாத்தில்
தேனாய் இனிக்கும்! திருக் குர்ஆன்!
வியாகுலத்தை விட்டின்பம்.
வேண்டுமட்டும் நல்கிடும் குர்ஆன்!

ஏழை எளியோர் பேதத்தை
இல்லா தொழித்து இவ்வுலகில்
வாழும் முஸ்லிம் மாந்தர்கள்!
ஓதிடும் புனித திருக் குர்ஆன்!

அறமும் அன்பும் அமைதியதும்
அகிலந்தன்னில் வழங்கிடவே!
இறங்கிய புனித குர்ஆனே
வற்றாத நன்மை தருவாயே!

நீதி எங்கும்  நிலைத்திடவே!
நீசர் தொல்லை தொலைந்திடவே
மனமெல்லாம் மகிழ்ச்சி காண
அருளினை தருவாய் அல்-குர்ஆன்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக