சனி, 2 ஏப்ரல், 2011

உறிஞ்சும் நிலமாய் கிழக்கு மண்....

சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கும்
உயிர் பலிகளுக்கும்
விலையேற்றங்களுக்கும்....
போராட்டங்களுக்கும் மத்தியில் களித்த
அந்த.....
சோக நாட்கள்...!

இன்னும் இன்னும்
கடல் அலைகளாய்
மனக்கரையை.....
தினம் தினம்
அரிக்கின்றன....!

உயிர்- தான் உடலெங்கும்
அச்சத்தை போ(ர்)த்திக் கொள்கிறது!

மனம்
வேதனையில் துடித்து
கண்ணீர் விட்டு
கொதித்து அலர் நின்றது...!

வாழ்க்கை-
விரக்தியில்மாறி
சஹாராப் பாலைவனமாகின்றது...!

வயது-
கிழிக்கும் கலண்டர்தாள்களின்
திகதிகளினால்
முதுமையை தடவுகின்றது...!

இளைஞர்கள்-யுவதிகள்
கிழவன்-கிழவிகள்
சின்னஞ் சிறுசுகள்
படித்தவர்கள்-படியாதவர்கள்
ஏழை-பணக்காரர்கள்
பத்திரிகையாளர்கள்-எழுத்தாளர்கள்
இப்படி....இப்படி...
தொடர்ந்து... தொடர்ந்து...
இவர்களின் நிலைமைகள்....
அசம்பாவிதங்களின் இருளுக்குள்....
காணாமல் போகின்றது!
தாக்குதல்களின் கொடூரங்களுக்குள்
மண்ணாகிப் போகின்றது!

உறுப்புக்கள் சில
கால்கள் வேறாய்....
கைகள் வேறாய்...
தலைகள் வேறாய்....
ஏன்....?
அங்கினங்களாய்
உருக்குலைந்து
காகம்...
நரி....
நாய்....
பேய்களுக்கு உணவாய் மாறுகின்றது...!

பிறந்து வளர்ந்த
அந்த இருப்பிடம்
தாக்குதல்களால்
காணாமல் போனது....!

அதோ...
அந்த ஷெல்தாக்குதலில்...
கன்னி வெடியில்....
துப்பாக்கிச் சப்தங்களில்
கிழக்கு மண்ணின் நிலைமை....!

தற்போது-
ஊரடங்குச்சட்டம்
ஆமாம்-
ஈக்களும்
புழுக்களும்
ரோந்து செல்கின்றன.

மனிதர்களுக்குப்-
பதில்
மண் மூடைகள்....!

ஆனாலும் என்ன....
சமாதானம்
பேசப்படுகின்றது
தாக்குதல்கள்

அதிகரிக்கின்றன
உறிஞ்சும் நிலமாய்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக