சனி, 16 ஏப்ரல், 2011

பெற்று விடாதே!

கருவில் இருந்து
என்னை பெற்று விடாதே
தாயே-
கருவில் இருந்து
என்னை பெற்று விடாதே!

பஞ்சமா யாதகங்கள்
இரக்கமில்லா இதயங்கள்
இறைவனின் சோதனைகள்...வேதனைகள்...
நிறைந்த இந்த மண்ணில்
மனிதனாய் பிறவாத வண்ணம்...

கருவில் இருந்து
என்னை பெற்று விடாதே.!

நீ-
கருவோடு! பிறப்போடு போராடு
கருவறையிலே
எனக்கு-
கல்லறை காட்டு!

கருவில் இருந்து
என்னை பெற்று விடாதே!

அங்கு தொப்புள் கொடி
நஞ்சுக்கொடியாய் மாறினாலும் பரவாயில்லை
எதுவுமே அறியாத-புரியாத
சிசுவாய்
நிம்மதியோடு போகட்டும்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக