திங்கள், 4 ஏப்ரல், 2011

நினைவுகளின் சுழல்வு!!!

கண்களுக்கு எட்டாத வெகு தூரத்தில்
நிழலாடும் நினைவுகள்.

தூங்கும் விழிகளை
தட்டியெழுப்பும் கனவு
போராட்டமாகும்.

கவிதைகளை மட்டுமே
எழுதத்தெரிந்த
ஆத்மா மட்டும்
சிந்தனை சிதறல்களில்

பத்திரிகைகளின் விமர்சனங்களாய்
முகவரி காட்டும்
இருப்பிட நிலமாய்
இதயம்

பேனாக்களின் உதிர்வுகளில்
அவலங்களை வெளிப்படுத்தும்  எழுத்துக்கள்...

களம் கொடுக்க
பசித்த வயிறுகளாய்
ருசிக்க முயலும் உதயத்தாரகைகள்
இரவு தூக்க போர்வையில்
நினைவுகளின் சுழல்வு
நிஜங்களின் உணர்வு....!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக