ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

காலத்தின் கோலம்....!!

ஆண்டுகளின் எண்ணிக்கை
அதிகரித்துக் கொண்டே நகர்கிறது.!
இளமைக் காலங்களை-
இனியையாய் போக்கிய
நாட்களின் மறைவுகள்;
இன்று-
இருண்ட இரவுகள்!
தூய மனங்கள்
கஷ்ட வாழ்க்கையில்
உதிர்ந்த பூக்களாய்
உலர்ந்து போகின்றன.

வரண்ட நிலத்தில்(பூமியில்)
ஈரம் கசியாத இரவுகளில்
நா வரண்டு துடிக்கும் .
தாகம் தலிக்கும்!!

மனதின் வேதனைகள்
இதய அடுப்பில் மூட்டிய
விறகுகள் போல்

எரிந்து சாம்பலாகின்றன.
புரியாத காலத்தின் கோலம்
புலம்பிச் செல்கின்றது.!

மழைக்கு ஏங்கி
இதயங்கள்-
கரமேந்தி பிரார்த்திக்கிறது....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக