செவ்வாய், 29 மார்ச், 2011

கை கொடுப்பீர்...!!

அத்தான் உங்கள் பார்வையில் கனிந்த
அன்பே தெரிகிறது-காதல்!
பித்தாய் எந்தன் பிஞ்சு மனது
பெரிதாய் விரிகிறது!

கண்கள் என்னும் கணையாலெந்தன்
கனிவுடல் புன்படுதே! -காதல்
கொண்டேன் என்னைக்
கனிவாய் வாழ்வில்
காத்திடக் கை தொடுவீர்!

வேலி இடுக்கால் விழிகளைப் பாச்சும்
வேதனை இனிவேண்டாம்- கழுத்தில்
தாலி கட்டித் தனிக்குடி நடத்தத்
தயாராய் வர வேண்டும்....!

மாதர் தம்மை ஏய்ப்போர் இந்த
மண்ணில் பலருண்டு -தூய
காதல் பூவைக் கசக்கும் தீயோர்
கருகும் நிலை கண்டு !

பெண்மை என்னும் பேரின்பத்தை
புரிந்தோர் உயர்வடைவார் -வாழ்வில்
உண்மை இன்பம் கண்டே உய்ய
உடனே வர வேண்டும்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக