ஞாயிறு, 6 மார்ச், 2011

தாய்மை!!!!


மழலையைப் பெற்றால் மாது
மகிழ்ச்சிக்கோர் எல்லையில்லை!
அழகினைத் தாயிற் காணும்
அழகுக்கு உவகை இல்லை!
“கொழு கொழு” உடலைத் தூக்கிக்
கொன்சிடல் அழகு- பிள்ளை
அழுகையும் மிக அழகு
அகிலத்தின் பேரழகு!
உலகின் கருணை வெள்ளம்
உதிப்பது தாயின் உள்ளம்.
மழலையைப் பெற்ற மாது
மாண்புறு பெண்மை தானே!
தாய்மையே பெண்மையாகும்
தளிரென மழலைச் செல்வம்.
வாழ்வினில் பெற்றெடுத்தல்
வளமான செல்வமாகும்!
விளை நிலம் பெண்ணேயாவாள்
வேறெதற் குவமை சொல்வீர்.
அழகினில் தாய்மை மேலே
அடுத்தவை யாவும் கீழே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக