திங்கள், 28 மார்ச், 2011

சொல்லு...!!

மூன்று நாட்களாய் :
கிழக்கு மண்ணிலே
பதற்றம் - மனசுக்குள்ளே
போராட்டம்...!

துப்பாக்கிச் சத்தமும்
அழு  குரல்களும்
கேட்குது -என்
இதயம்  மட்டும் பயத்தால்
9.0 சுனாமியாய்
பாயுது...!

சமுர்த்தி கேட்டு ;
விண்ணப்பித்த போதும்-என்
பிரதேச செயலாளர் நட்பிட்டிமுனை பளீலின் உயிரும்
உடலை விட்டுப் போச்சு!!

அசம்பாவிதங்கள் கூடிப் போகுதடி
நாடு-உன்
எழுத்துக்களாலே செழித்திடனும்
எம் தூய உறவு!

புத்தி ஜீவிகளை
ஏனடி கொள்வது....? உன்
இனத்தவருக்கு அவர்கள்
என்னடி செய்வது....?

வெச்சிருக்கேன் தமிழிலே
பற்று-என்
கலை இதயத்தை
தொட்டு!

சமாதானத்தை
ஏற்படுத்த வந்தவனே;
நில்லு-நோர்வேயினரின்
போக்கு என்னவென்று
சொல்லு...?

இலங்கையில்
உயிர் இழப்புக்களை;
தடுத்து நிறுத்து!
இல்லையேல்
ஈழத்தையே அழித்து
நொருக்கு...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக