திங்கள், 7 மார்ச், 2011

நீரிழிவு!!

வயிற்றில்
பசியெடுக்கும் அவஸ்தைகள்
பட்டனியிருந்தும்
சுகம் பெறாத வியாதியாய்!
அதே தொல்லைகள்;
என் வியாதி சீனியாகி
என் நாவிலேயே இனிக்கும்.

நோவினைகளை உடம்பில் போட்டு
ஓடும் குருதியினை சோதிக்க
இரத்தத்தில் எண்ணிக்கைகளை -
அரிய முயற்சிக்கையில்
நீரிழிவினால் செயலிழந்த
கிட்டினியின் ரகசியம் தெரியவரும்;

உயிரின் மூச்சு
கடந்த காலங்களாய்
சுவாசிக்க தல்லாடும்;
உடல் மெலிவில்
களைப்பு நிறைந்த தவிப்பு
நாவை வறட்சியாக்கிக் கொள்ளும்;

வைத்தியர்களின்
ஆலோசனைகளில்
பல்லாயிரம் ஆறுதல்கள்
மனதை தேற்றினாலும் 
இந்த நோய் நிறைந்த
நிலைமையிலும்
நிரம்பியிருக்கும்  வறுமை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக