ஞாயிறு, 6 மார்ச், 2011

கணவனே உயிர் !


கணவனை உயிரெனப் பேணுங்கடி! -அவன்
காதலை நாளுமே! போற்றுங்கடி!
குணத்தினில் வாசுகி ஆகுங்கடி-நல்ல
குங்குமம் நெற்றியில் பூசுங்கடி!
அன்பினால் கணவனை ஆளுங்கடி-தினம்
ஆனந்த வெள்ளத்தில் மூழ்குங்கடி!
துன்பத்தை வாழ்க்கையில் போக்குங்கடி-உயர்
தூய்மையை நாளுமே ஆக்குங்கடி!
கற்பினைக் கண்ணெனப் பேணுங்கடி-நல்ல
கருணையை நெஞ்சிலே பூணுங்கடி!
அற்புத மகவினை ஈனுங்கடி-அதை
அருமையாய் வளர்த்தின்பம் காணுங்கடி!
இல்லத்தை சொர்க்கமாய் மாற்றுங்கடி-அங்கு
இணையில்லா இன்பத்தை ஊற்றுங்கடி!
வெல்லத்தைப் போலன்பாய் பேசுங்கடி-என்றும்
வீணான கொள்கையை வீசுங்கடி!
அரைகுறை ஆடையைத் தள்ளுங்கடி-நம்ம
அழகான பண்பாட்டைக் கொள்ளுங்கடி!
கரையில்லா இன்பத்தைக் காணுங்கடி-என்றும்
கணவனை உயிரெனப் பேணுங்கடி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக