செவ்வாய், 29 மார்ச், 2011

தலை எழுத்து உயிர் எழுத்துக்களாய்.....!

எந்த உதவிக்
கரங்களும் என் தலையை
தடவத் தேவையில்லை....!

எந்த-
அனுதாப வார்த்தைகளும்
என்னை
அணுகத் தேவையில்லை...!

நானே....
சுயவிருப்பில்
தேடி தடவிக்கொண்ட
உறவு

என்
ஆபத்தில் உதவிய
ஓர் நன்றிக்கடனுக்காக....!
நான் உயிராய் நேசித்தேன்
நீ,
என்னை-
கடுகளவாவது நேசித்தாயா...?

ஒவ்வரு சொல்லும்
கீரியும் பாம்புமாக.....
போரடித்து மாயும்....

ஒவ்வொரு சொல்லும்
என்னிதயப் பொந்தை அரிக்கும்
கரையான்களாக....

ஒவ்வொரு தகவலும்
என்னுயிரை சுட்டுப் பொசுக்கும்
ரவைகளாக...

நான்
எந்தளவுக்குப் பொறுமையாளன்
என்பது-
உனக்குத் தெரியும்!

என்- மனதின்
ஆழம்
அதன் நீளம்
உனக்கு புரியவில்லை.
ஆனாலும்-
உனக்குத் தெரியும்
என்னைப் பற்றி
எனக்குத் தெரியும்
உன் மனதைப் பற்றி

தாக்கு
ஈராக் யுத்தமாய் தாக்கு.....

உன்னை 'நேசித்த....'
ஒரே ஒரு காரணத்திற்காய்....

நீ-
ஏன் மரம் விட்டு மரம் தாவும்
மந்தியாகிப் போனாய்...!

வாழ்ந்த காலங்களை
வருடங்களே
சாட்சி சொல்லும்....?

அடி ஸகீ...!
இப்படி என்னை
கை கழுவி விட
யார்-உனக்குக்
கற்றுத் தந்தது....?

யார் பேச்சில்-
இப்படி-
வாழ்கின்றாய்...?

விரும்பினால்
பதில் சொல்....
நானும்...நீயும்...
நீயும்....நானும்....
சுவாசமும்....மூச்சுமாயிருந்தோம்...

நானும்......நீயும்.....
நீயும்...நானும்......
வானமும்.....பூமியுமாய்.....
பூமியும்.....வானமுமாய்.......
ஒன்றிணைந்து பார்க்க
முடியாதவைகளாய்......

அடி ஸகீ...
என்னை-நீ
புதைகுழிக்குள்
அனுப்பி விட்டாய்....

என் ஸகீ....
உயிர்
உடலை விட்டு
விலகிக் கொண்டிருக்கும்
இந்த-எம்
பரிசுத்த உறவின்
பிரிவு....
எதிர்பார்ப்புக்களின்
ஏமாற்றம்.....?

உன்னை-
தேடி....தேடி...
பின் தொடர்ந்து
கொண்டிருக்கும்......

உன்னையே....
அழைத்துக் கொண்டிருக்கும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக