திங்கள், 7 மார்ச், 2011

ஏன்?

நீ கொட்டுகிறாய்!
நீ கொட்டுவதைப் பற்றி
நாங்கள் மனம் குளிர
பேசிக் கொண்டிருக்கிறோம்!

நாங்கள்
சகிக்க முடியாத அழிவுகளை
நீ செய்கிறாய்!
நாங்கள்-
தாங்க முடியாத அவஸ்தைகளைப் பற்றி
கொஞ்சமும்  அறியாமல் அடை மழையாய்
இரவு பகலாய்
நீ கொட்டுகிறாய்!

துயரத்தின் மத்தியில்
வசித்த இல்லத்தை விட்டு
அகதி முகாங்களுக்கு  போன அவலத்தின்
கொடுமைகளையெல்லாம்
நீ அறியாது கொட்டுகிறாய்!

நீ; கொட்டுகிறாய்-என்று
பூமி பொறுமை இழக்கிறது!
ஆனாலும் ஓர் வேண்டுதல்
வருடா வருடம்
இயற்கை அழிவுகளை நேசிக்கும்
எம் வெள்ளை மனத்தையா
பள்ளமாக்கி போகிறாய்.??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக