ஞாயிறு, 6 மார்ச், 2011

கீழ் வானம்....

மனசு
அடை மழை குளிரில்
சூரியனை காணத்
துடிக்கும்.

அவஸ்தைகள்
என் ஆத்மாவின் கதறல்களாய்
வறுமையை தடவும்!

அரசாங்கத்தின்
ஒரு சிறு நிவாரணப் பொதிகை
என் மனதிற்கு ஆறுதலை கொடுக்கும்.

தென்றலின்
சுகமான மெல்லிய தடவல்
என் உடம்புக்கு காச்சலை கூட்டும்.

வீட்டு முற்றத்தோடு
தேங்கிக் கிடக்கும் நீரோடை
நுளம்புகளை பெருக்கும்.

இயற்கையின் அழிவுகளுக்கு வளம்
சேர்க்க
என் பிறந்த மண்ணில் இடம் தேடி
கடல் கொந்தளிப்பு....
பெரு வெள்ளம்....
சூறாவளிக் காற்று....
சுனாமி அட்டகாசங்கள் எல்லைகள் மீறும்!

டிசம்பர் மாதம் வருடா வருடம்
என் நெஞ்சில்
ஆறாக் காயங்களை ஏற்படுத்தும்.

மரணத்தின்
நிறந்தர பயணத்தில்
பயணம் செய்ய
ஆத்மாவின் சுவாசம்
மூச்சுக்களை அடக்க துடிக்கும்.

அடை மழை குளிரில்
சூரியனை காண
கண்கள் துடிக்க....
என் எழுத்துக்களை போல்
கீழ் வானம் வெளிக்கும்!
கார்முகில்களுக்குள்!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக