ஞாயிறு, 13 மார்ச், 2011

தவிப்பு...!

மறந்து போனாயா  சகீ !
நீ
என்னை வெறுத்துப் போனாயா...?
சகித்துக் கொள்ள முடியாத
பாரிய துயரத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!

இமைகளின்
சிமிட்டல்களாய்
மேலும் மேலும்
என் இதயத்தின்
வலியின் அவஸ்த்தைகள்,,!

உன்னை-
மூச்சுக்களாய் சுவாசித்த
ஓர் தூய இதயத்தின் வேதனைக்குள்
உன்னை அழைக்கிறேன்!

பொறாமையாளரின்
போலி வார்த்தைக்கு போனாயே எனும்
வேதனை வினாக்குள்
என் இதயம்
விடை காண  முடியாது
தவிர்த்து நிற்கிறது!

கோபங்களை மறந்துவா
உனக்கான
தூய இதயம்
துடித்து அழுகின்றது!

நீயும்-நானும்
இரட்டைத் தாயின்
ஒற்றைக் குழந்தைகளே!
ஓர் விசித்திரமான தலைப்புக்கள்
வினா அல்ல.
என் பாசம்
உயிரிலும் மேலானது என்பதை
புரிந்து கொள்!

நான் பாவி.
நீ பெருமதிமிக்க உறவு
என்றோ நம் நட்பிக்கு
உயிர் கொடுத்தபின்
யார் பிரிந்தாலும் என்ன?
பொறாமை பட்டாலும் என்ன?
அவதூறு சொன்னாலும் என்ன?
அவமானப் படுத்தினாலும் என்ன?
நாம் நாமகத்தான்
வாழ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக