திங்கள், 7 மார்ச், 2011

வேதனைகளோடு!!!!

பிரிவுத் துயரின் வேதனைகளோடு
நானும்! நீயும்!!

எனதும் உனதும்
தூய்மையான உறவின் மீது
கலங்கத்தை ஏற்படுத்தியவள்
பூனையின் வாயில் அகப்பட்ட எலியாய்!!

பொறுமை-
வெற்றியை சுமந்து செல்லும்!
வயிற்றுக்குள் கதறும்
பசியின் கொடுமையறியாது
அடுப்பு எரியாமல் உறங்குவதாய்!!

மின் கம்பத்தில்
சிக்குண்டுத் தொங்கும்
வெளவ்வால்களின் கோலத்தில்
அந்தரத்தில் ஊஞ்சலாடும்-
 பொறாமை பிடித்த இதயங்கள்.,

நட்புள்ளங்களின் பாசக் குருதிகளை
உறிஞ்சிக் குடிக்கும்
அட்டைகளாய்-சில
இதயங்கள் தேங்கிக் கிடக்கும்!

பிரிவுத் துயரின் வேதனைகளோடு
நானும்! நீயும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக