வெள்ளி, 5 ஏப்ரல், 2013


உழைத்து உழைத்து நாமுந்தான் ஓட்டாய் தேய !
உளையாதார் ஊதித்தான் பெருக்கக் கண்டோம் !
இழைத் தே நாம் இடுப் பொடிய ! ஈ ரம் மில்லா ..
இதயத்தார் இருந்துறிஞ்சி "மேலே "சென்றார் !

முதுகினிலே ! கூ டையினை தாங்கி நாமும் !
முது கொடியக் கொழுந்தெடுத்துக் கொணர்ந்து சேர்ந்தோம் 
புது வாழ்வு ! நாம் கண்டதில்லை !
புல்லர்கள் வாழ்வுக்கே ! உரமாகிப் போனோம் !

ஓட்டை'லயம் 'தானெமது உலகும் வாழ்வும் '
உழைப்புத் தான் உயிரெமக்கு !ஓய்வோ தூக்கம்
காட்டையெல்லாம் கழனிகளாய்ச் செய்தோம் எங்கள்
கனவுகளோ ! கண்ணீரில் கரையக் கண்டோம் !

மலையகத்து இலைகளுக்குப் பசுமை சேர்க்க !
மணி மணியாய் வியர்வையினை வடித்து தந்தோம்
நிலை மாறி எம் வாழ்வில் பசுமை பூத்து
நின்மதியாய் வாழும் நாள் எனறு பூ க்கும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக