வெள்ளி, 5 ஏப்ரல், 2013


தொப்புள் கொடி உறவு தந்த
பாசம் எங்கு போனது ?
உடன் பிறப்பைத் தேடிச் சோர்ந்து போய்
துயரம் மனதில் துடிக்குது

உறவு மகரந்தத்தை உறிஞ்சிக் கொண்டு
வண்டு எங்கு பரந்தது ?
பச்சோலையை அறுத்துப் போடுவதற்காய்
புதிய தென்னை தேடுது !

நேசித்த இதயத்தை பிரித்த பின்னர்
பொறாமை எங்கு போகுது?
பொய்க்காக வாயை திறக்கும்
நாவு ருசிக்க பழியைத் தேடுது !

விட்ட மூச்சு சுவாசிக்கும் காற்றில்
வயது எங்கே போகுது ?
புதை குழியில் வாழ வேண்டித்
நல்லமல்களை தேடுது !
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக