புதன், 28 மார்ச், 2012

முடிவதில்லை ....!
மனதில் வளர்வதால்
நட்பின் ஆழம் புரிவதில்லை

இன மொழி பார்ப்பதனால்

உறவின் தொடர்பு அழிவதில்லை

அன்பை பெறுவதற்கு
சிபார்சுகள் தேவையில்லை
நட்பை அடைவதற்கு -ஒரு
உள்ளத்தால் மட்டும் முடிவதில்லை

பேசிப் பழகுவதால்
தோழி அருமை புரிவதில்லை
தூரத்தில் வாழ்வதால்
அன்பு குறைந்து போவதில்லை

துன்பங்கள் தடவுவதால்
இதயம் வாடிப் போவதில்லை
அழுது புலம்புவதனால்
போன உயிர் திரும்புவதில்லை

உயிரை படை ப்பதற்கு
மனிதர்கள் எம்மால் முடியாது...
உயிரை எடுப்பதற்கு -ஒரு
தோட்டா போதுமென்பேன் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக