புதன், 28 மார்ச், 2012

நீ ..,
என் அருகில் இருந்தால்
நான் -
இவ்வாறு கூறுவேன்,
என் இதயத்தில் உனக்காக கொண்டுள்ள
காதல்-
எல்லையற்றது ..!

பரந்து விரிந்தசமுத்திரத்திலே
எழும்பும்-
அலையைப் போன்றது
நான் உன் மேல் கொண்டுள்ள
காதலின் எல்லை ....!

வானத்தின் உச்சியிலே
பிரகாசிக்கும் விண் மீனைப் போன்றது
நான் உன் மேல் கொண்டுள்ள
காதலின் எல்லை ...!

கானகத்தில் தனியாக
பூக்கும் பூவைப் போன்றது
நான் உன் மேல் கொண்டுள்ள
காதலின் எல்லை ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக