வியாழன், 29 மார்ச், 2012

பிரிவுத் துயரத்தில் வாடிய மனசு

வானொலிக் குயிலின்
குரலோசை -
பட்டுப் போனதால்
பரிதவிக்கும் வாழ்வு ..

துயரச் சின்னங்களாக
வேதனை நிகழ்வுகள்
ஓரத்தில் நின்று
ஓரக்கண் சிமிட்டும் .....

அழுத பொழுதும்
ஆழ்ந்த துயரை
துடைத்து விட்டு
ஆறுதல் சொல்லும் ....!

வேதனைகளை -
சுமந்து சுமந்ததே ...

துடித்துப் போன
இதயமும் -

களைத்துப் போன
மன உணர்வுகளும்
கண்ணீர் வடித்து
ஓவெனக் கத்திய
உதடுகளும்
ஊமைப் போராட்ட
உபன்னியாசம் செய்யும் ..

கால நகர்வுகள்
கடுகதிச் சிறகை
விரிக்க -
உயிர்ப் பூ
உறங்கா திருக்கும்

வாடிப் போகும் என்னுயிரில்
உயிர்ப் பூ
உறங்காதிருக்கும் ..
உதிர்வின் ஓரத்தில்
சருகாய் கிடக்கும் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக