வியாழன், 19 ஏப்ரல், 2012


பல நூறு
நினைவுச் சுவடுகள்
மின்னலாய்
வந்து மறையும்
விரிந்த மனம் இது


எந்த நட்புள்ளங்களையும்
அன்பாக -நேசிக்கின்ற
மனதினை
என்னுள் இருந்து
உணர்ந்தேன் ..!

மனத் தோட்டத்தில்
இதழ் விரிந்த
பூக்களின் வாசத்தை
நுகரந்து போனவர்களின்
சுவாசத்தில் மூச்சுக்களாய் போனது
ஞாபக்கத்தில் வந்தது ...!

நினைவுகள்அவற்றை மறக்கவில்லை
புதிய உறவுக்கு
மனம் இடம் கொடுக்கிறது
உள்ளம் அன்பைக் காதலிக்கிறது
அன்பு உள்ளத்தைக் காதலிக்கிறது

பிரிக்கவே முடியாத இந்த உறவை
எட்டி நின்று வேடிக்கை பார்
அன்பு மனம் திறந்து சொல்லும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக