வியாழன், 19 ஏப்ரல், 2012

பிறந்த நாள் தொடக்கம்!
வாழ் நாள் முழுவதுமாய்
மனதில் போராட்டம் .....

காலங்கள் நகர நகர
வழக்கம் போல்
வாழ்க்கைப் பயணம்

மண்ணில் தொடங்கி
உயிர் -
மண்ணறை போகும் வரை ...!

திடீரென வாழ்க்கைச் சுமைகள்
சகிக்க முடியாத நிகழ்வுகள்
உள்ளத்தைச் சோகமாக்கிய
துயர பதிவுகள்

சுவாசத்தில்
மூச்சு மூச்சுக்களாய் பெருமூச்சுக்கள்
கஷ்டங்கள்
வாழ்க்கைச் சுமைகள்
சற்று அதிகமாய்
பெருகிப் பெருகி .......
தினம் தினமாய் பாரமாய்

இதயம் வழித்து சோகத்தை
உடலெங்கும் தெளித்தது
நாட்டின்
தொல்லை நிகழ்வுகள்
..

ஆண்கள் பெண்கள்
சிறியவர்கள்; பெரியவர்கள்;
ஏழை பணக்கார்கள்
இன்னும் இன்னுமாய்
எத்தனை எத்தனை ...,!உயிர்கள்
நாட்டின் தொல்லைகளில்

யாரிடமும் எதிர்ப்பில்லை!
எவரிடமும் முகச் சுளிப்பில்லை!

பசிக் கொடுமைகளோடு
முட்டி மோதிக் கொண்டு
ஏழை உள்ளங்களின்
மனங்களை
எல்லோரும் சோதனை செய்கின்றனர்

வரண்ட மனசு
கொதித்த இதயம்
மனிதர்களின் உள்ளத்து உணர்வு
நோகாமல் வாழ
அருளினை தந்து போ இறைவா

நன்றியோடு தொழுதவர்
வரிசையில்
நானும் ஓர் தொழுகையா ளராய்......


இறைவா
நோகாமல் வாழ
அருளினை தந்து போ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக