வியாழன், 19 ஏப்ரல், 2012

மனசு இங்கு
துடியாய் துடிக்கிறது
வேதனையோடு
அழுவதை பார்க்க
என் கண்களே
எனக்கு கிணறு ...!

அந்த பாசம்
சுரந்த பசு
அன்போடு பால் தரும்.

தாயின் உதிரத்தில்
தினமும் சங்கமிக்கும்
சுவையில்

அந்த‌ பேசாத உருவம் கூட‌
எனக்கு -
பெற்றவளின் குருதித் துளிகளின் ....,
பால் வாடையாய் ....-
வாசம் வீசிக் காட்டும் ..!

தாகம் போக்கும்
நாவுகள் -
உர‌சி உர‌சி
ஈரமாக்கும் போது
அந்த‌ துளி துளிச் சொட்டுகளின்
சந்தோசத்தோடு -
மனசு துங்கி விடுமோ
என்ற -
மன ஆறுதல் வருவதுண்டு ...!

என் நட்புள்ளத்துக்கு
இதயத்தின் அருமை புரியாதிருக்கும்

உண்மையான பாசமும்
புரிந்து உணர்வும்
வ்ந்தால்
உள்ளத்தின் ஏக்க‌ம் புரியும்

அப்போ
பாசத் துளிகள்
ஊற்றுக்கள் போல் கசியும்
உயிர்க் குழிக‌ளிலிருந்து ஓடும் குருதி போன்று
எல்லை மறந்து
அது வழியும்

பாசமான
நட்பின் தடவல்களாக
அன்புள்ளவர்களின்
ம‌ன‌த்தில் ம‌ட்டுமே
ப‌திவாகும்.

ஆமாம்
பால் தரும் பசுவுக்கும்
பாசம் காட்டும்
அன்புக்கும்
உள்ள வித்தியாசம் .
புரியும் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக