ஞாயிறு, 13 ஜூலை, 2014

காலத்தால் அழியாத கலை ..!




சேனைப் பயிரைத் திருடவரும் கிளியினத்தை 

தேன்னிய குரல் காட்டித் திரத்துகின்ற -மானைப் 

பெண்ணெற்று சொல்லின் பெரும் பிழையே தேவதையின் 

கண்ணிரண்டும் காதற் கயல் !


சோலைக் கிளியைச்  சூவென்று நானோட்டும் 

சேலையுடுத்த   கிளி செவ்வந்தி -ஆளை 

மயக்கும் மாறனவன் ! மலரம்பே விழி மலர்கள் 

நயந்தொழுகும் அவை நின்று நரை !


சோளன் கதிரோ ! சுவையான மாதுளையோ !

வாளென்ன நிற்கும் வடிவமது ?- காளை 

இதயத்தைக் கண் மூடிக் கண்ட படி குத்துவது 

எது வென்று புரிய வில்லை ஏம !


வெண்டை விரல் வடிவம் !வேல்வடிவம் உள்ளங்கை 

கொண்டை சிறு பூசனிக்காய் !கோலையிதழ் தண்டுக் 

கரங்கள் :காலிரண்டும் செங்கதலி ! ,கன்னியவள் 

அருங்காதல் நெஞ்சத்து அலை !


வெடித்த வெள்ளரியின் விதை போன்ற   பற்சிரிப்பு !

கடித்துண்ணத் தூண்டும் கன்னங்கள் - இடித்த 

ஏலக்காய் போலே !இவள் பேச்சு தமிழ் மணக்கும் 

காலத்தால் அழியாத கலை ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக