ஞாயிறு, 13 ஜூலை, 2014

பிராத்தனை துளிகள் ..!





பிறந்து வாழுகின்ற உயிர்களின் எதிர் பார்ப்புக்கள்
இறந்து போகின்ற உள்ளங்களின் வேதனைகள்
வேடிக்கைப் பார்க்கின்ற இரக்கமில்லா ஜீவங்கள் ..!
உயிரற்ற சடலத்தை சுமப்பதற்கு
நான்கு தோள்கள் கரம் கொடுக்க
மறுமை வாழ்வை நிலையுருத்தி நிற்கும் மரணம் ..
பிறப்பும் இறப்பும் இணைந்துவாழும் வாழ்க்கை .
நிலையற்ற நினைவுகளைஉறிஞ்சியெடுக்கின்ற மனசு
எல்லாம் மறைகின்றன இரவு பகல் மாற்றங்களில்
இஸ்மாயில் நபியின் தாகத்தை தீர்க்க ,
ஊற்றெடுத்த சம்ஷம் நீரினை குடிக்க
போட்டி போடுகின்ற நல்லடியார்கள் மத்தியில்
வாழ, எல்லையற்ற சோதனைகள் தொடர
பல நல்ல இதயங்கள் நொந்து மறைந்தனர்
அப்பாவி உள்ளங்கள் மானம் காத்து..
எத்தியோப்பிய மண்ணில்
எலும்புக் கூடுகளாய் வாழும் உறவுகளுக்கு
இதயம் பிழிந்தோடும் பிராத்தனை துளிகள் ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக