செவ்வாய், 22 ஜூலை, 2014

தென்றல்



காற்றுகள் பல வந்தும்
கலங்கிடாமல் நிற்கின்ற
ஆற்றலுள் ளொன் நானென்று
அகங்காரம் கொண்ட ஒரு
வாட்டமுள்ள ஆல மரம்
வாழை யொன்றை நோக்கியது !

சிறியவனே நீ இந்தச் 
செகத்தினிலே வாழ்ந்து விடும்
அரு கதையோ சில காலம்
அறிவாயோ என்று ரைத்துப்
பெருஞ் சத்தம் போட்டுத் தன்
பேரிரைச்சலைக் காட்டியது

வாழை மரமோ வாய்திறவா (து)
வருத்தமுடன் நிற்கையிலே
காலையிலே வீசிய புயற்
காற்றதனால் எதிர் நின்ற
அவவால மரம் விழுஞ் சத்தம்
அவ் வாழைக் கொலித்ததுவாம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக