செவ்வாய், 22 ஜூலை, 2014

எட்டிப்பிடிக்காதயிவள்


நவம்பர் டிசம்பர் மாதம் கிழக்கில் குட்டை குளம் நிரம்பும்
குளிர் கால மழை வந்தாலே போதும் -அவள்
ஒட்டி உறவாடி நித்திரையில் காதுக்குள்
மதலை மொழி பேசி மகிழ வருவாளாம் 
சட்டென அடித்து விட்டு சனியனே போ என்றாலும்
வெட்கப்படாமல் திரும்பி வருவாளாம் அவள்
பாசமுடன் நம்முடலை உறிஞ்சி எடுக்கலாமென்ரென்னி
சட்ரென்று முத்த மழை பொழி வாளாம்

கட்டில்படுக்கையானாலும் கல்யாண வீடே யானாலும்
போகுமிடமெல்லாமே காதல் -நாம்
மண்ணிலே கிடந்தாலும் மாடி வீட்டில் வாழ்ந்தாலும்
உறவெனக் கொஞ்சி மகிழ் வாளாம்
அனுமதியின்றி எமையானுகி குருதியை வயிறா ர
உரிமையுடன் தானுறிஞ்சுவாளாம் -இந்தக்
பென்னழகி தன்னை யொரு காளையனும் விரும்பாத
காரனத்தை என்ன சொல்வேனான் ...?

பாசமற்ற இப் பேரழகி எதிரியாய் எமையணுகி
விரக்திக்குட் படுத்துவாளாம் -தினம்
நள்ளிரவு நேரத்திலும் நம்முடைய உறக்கத்தை
எழுப்பி விட்டு விடு வாளாம்
எட்டிப்பிடிக்காதயிவள் கட்டிப் பிடிக்கத்தான்
சங்கிதம் பாடி வருவாளாம் மிக
கெட் ட உறவாலே மலேரியா டெங்கு தந்துயிரை
மரணத்துக்குத் தள்ளி விடும் பாவியிவள் நுளம்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக