சனி, 12 ஜூலை, 2014

மா கவி பாரதி



தமிழ் மண்ணிலே தோன்றியே-நல்ல   
பாவினை ஊட்டினான் மனங்களிலே 
சுவையுடன் கவி பாடினான் -தமிழ் 
உணர்வு யில்லாதோரைத் தூற்றினான் /தூண்டினான் /

ஆழமாய் கவிதைகளைப்  படைத்தான் - கெட்ட 
சாதி பேதங்களை மாற்றினான் 
உழைத்து வாழப் பாடினான் -வீணே 
சோம்பரியாய்  கிடப்போரை விரட்டினான் 

கெட்ட உள்ளங்களைச் சாடினான் -அதை 
உயர்வாய் மதித்து போற்றினான் 
பாவினிலே மெரு கேற்றினான் -தமிழ் 
பற்றின் உயர் வினைக் கூட்டினான் 

பெண்ணின் பெருமையை போற்றினான் -அவர்களை 
மதித்து நின்று வாழ்த்தினான் 
மண்ணின் மாணிக்கம் அவளென்று --தினம் 
 பாடிப் புகழ்ந்து காட்டினான் மானிடர்க்கு 

அடிமைத் தனத்தை சாடினான் 
நாட்டின் நடப்புக்களையும் பாடினான் 
சாவுக் கஞ்சாது எழுதினான்  -மண்ணில்
மாறாப் புகழினை பெற்றிட்டான் 

பாரதிக்கு பா வடிக்கவே -என்
சிந்தனை துளி உற்றெடுக்கும் வெள்ளமே 
மண்ணில் பிறந்தவன் கவி மனங்களிலே -அந்த 
மா கவி பாரதி விண்ணிலே ....

2 கருத்துகள்:

  1. வணக்கம்
    பெண்ணின் பெருமையை போற்றினான்
    சாதி மடமையை ஒழித்தான். பாரதி.
    மிக அற்புதமான கவிதை நல்கியமைக்கு எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. -அன்புச சகோதரன் ரூபன் உங்கள் அன்புக்கும் ,கருத்துக்கும் என் ஆழமான நன்றிகள்

    பதிலளிநீக்கு