புதன், 21 டிசம்பர், 2011

 வாழ்க்கைப் புத்தகங்களுக்குள்ளே
அரிப்பு
கரையான்கலும்
எறும்புகலும்
கரப்பத்தான் பூச்சிகலும்!

பாட்டி சொல்லுவா
வாழ்க்கை என்பது
ஓர் புத்தகமென்று!

கவனமாக படியென்று!!
பக்குவமாய் பேனுமென்று!!
படிக்கத் தொடங்கையில்
பல்லாயிரம் வினாக்கள்
விடை கூற முடியாதொன்று?

ஒரே யோசனை
பகல் இரவாகவும்
இரவு...பகலாகவும்

பாட்டி சொன்னா
கவலைப்படாதே!
வாழ்க்கையை ,
கன நாள் வேண்டுமென்று....

நினைவுகள் மட்டும்
என்னை
நிழலாய் தொடர்கையில்
அன்பு....
பாசம்.........
அரவணைப்பு........
எல்லாம்
மனதுடனும்......
பெண்மையின் மௌனங்களுடனும்

மலரும் விடியலாய்
நகரும் இரவுகளாய்..........
என் வாழ்க்கைப் பயணம்!

அப்பத்தா சொன்னா
கலி காலம் இப்படித்தானாம்!
மலத்தைக் கண்டாள் மிதிப்பான்
நீரைக் கண்டாள் கழுவுவான் என்று!

கற்பும் மானமும் இழந்தனர்
வாழ்வுக் கிடங்கில்
சிசுக்களை
அறிமுகம் செய்தனர்
பெயர்களை சூட்டி!

ஏச்சுக்களும் பேச்சுக்களும்
கதைகளும்...கால்களும்...!
வீடு தொடக்கம்
வீதி வரை!

இப்போதெல்லாம் - நாங்கள்
வாழ்வதுமில்லை - வாழப்
போவதுமில்லை..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக