புதன், 21 டிசம்பர், 2011


பல்லாயிரம் நட்புகள் என்னை
நேசித்தாலும் உன் உறவுக்கு முன்னே
எல்லாமே தூரம் தான் எனக்கு
சுவாசிக்கும் முச்சுக்களாக எனக்குள்ளே ,நீ

தேடிய செல்வங்கள்
நாடிய நட்புக்கள்
எல்லாமே போலியாகிப் போனது.
உன் உறவு கிடைக்கும்வரை....

பாசத்துக்காய் ஏங்கிய
இதயத்தை அன்பால்
அரவனைத்து
மகிழ்ச்சி யூட்டினாய் நீ ,

உன் பேச்சுக்களும் எழுத்துக்களும்
உன்னை எனக்குள் உரிமையாக்கியது
உனக்கும் எனக்கும் ஒரு நெருக்கம்.
பாசம் புரியாமல் !தவிக்கிறேன்

உன் உறவுதோட்டத்துக்குள்
நான் உன்னையே நுகர்ந்து வந்தேன்
வெறும்மூச்சுக்கள் அல்ல !நீ என்
உயிரில் கலந்த சுவாசங்கள்

நா ன் எழுதும் எழுத்துக்களாக
நான் சுவாசிக்கும் மூச்சுக்களாக
நான் ,தேடும் உறவாக
நீ எப்போதும் என்னுடன்!
என் நினைவுகளுடன் ..!

கலங்கம் இல்லா உறவில்
துயரம் மறந்து போகிறேன்
உன் நினைவுகளை சுமந்தது கொண்டு
இன்னும் உனக்காக மட்டுமே..!

நீ என்னைக் காணும் வரை தவமிருக்கிறேன்
இரவு பகல் மறந்து
ஊன் உறவு இழந்து
உன் நினைவுகளில் உயிர் வைத்து
காத்திருக்கிறேன்,
உன்னை காணும் வரை
ஒரு ..
முத்தம் தரும் வரை ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக