புதன், 21 டிசம்பர், 2011

என்
நாடி நரம்புகளில்
உன் நினைவு குருதி

நீ_
சுவாசிக்கும் மூச்சில்
நான் உயிர் வாழ்வதா ,,,?
அல்லது
உயிர் பிரிவதா ,,,?

விறகாய் எரிகின்ற
சாம்பல் நிலத்தில்
தவிக்கும் நாவின் வரட்சி எனதானது ..!

புரிகிறதா தோஸ்த்
பிறந்த மண்ணின் அவலம் .

சதா கால
வேதனையின் அவஸ்தையை
இதோ ..!
எனது சமூகம்
அப்பாவி உயிர்களை
உறிஞ்சி...உறிஞ்சி,,, சுவைக்கும்
இரத்த வெறி பிடித்த மானிடம் தானே ,,,?

என் உள்ளத்தில்
கொதித்தலறும் வேதனையை
யாரும் அறிவார் ,,,?
கலவரத் தீயின்
அகதிச் சாம்பலை ,,,?

யாழ் நகர்
பிறந்த மண் தானே ,,?
ஈரமான நினைவுகளை ,,,
தோன்றிப் பாக்கலாம்
மரத்தின் வெரென்றால்
இது
உடம்பின் உயிராச்சே,,,!
எங்கு போய்
எப்படி வாழ்வது ,,?
அகதியாகவே முகாமில் இருப்போம்
தேடி வரும் எமக்கு
நிவாரணம் ,,,!
அது தானே
பட்டனி கிடக்கும்
எம்மவரின் பசிக்கு கிடைக்கும்
பொட்டலம் ,,,!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக