வெள்ளி, 30 டிசம்பர், 2011

படித்தவர் ! படிப்பும் அன்னார் !
இதயமும் மகிழ்ந்திட வேண்டும்
பழுதிலா சேவை கள்
செய்து நாம் உயரவேண்டும் ..!

சிறிய மாணவ இதயங்களின்
பேற்றினை மதித்தல் வேண்டும்
புன்படா நிலையில் பண்பு
பொலிந்துற வாட வேண்டும் !

சத்தியம் எதுவென் றாய்ந்து
தானுணர்ந் தோதல் வேண்டும்
பைத்தியம் போலு ள ராது
பைந் தமிழ் ஊட்ட வேண்டும் ..!

போட்டிகள் கொண்டு !பொல்லாப்
பொறாமையை நீக்க நீண்டும்
நாட்டினில் மலர்ச்சி நல்கும்
நல் லிலக்கியங்கள் வேண்டும் .!

ஒற்றுமை வேண்டும் .!என்றும்
உண்மையே !வாழ்வில் வேண்டும்
கற்று நாம் தேர்ந்து இன்பக்
காவியம் பண்ணல் வேண்டும்!

மின்னலாய் மாணவகளைத் தாக்கி
மீதித்திடும் ஆசான்கள் மாறி
கன்னனால்கல்வி அறிவை
கனமுடன் ஊட்ட வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக