புதன், 21 டிசம்பர், 2011

மின்னல் போல் வந்து,
இடி போல் அழிவின் தாக்கம்
தாங்காமல் தட்டுத் தடுமாறி ....!

கரைந்து போன நினைவுகள் ...
மறைந்து போன உறவுகள் ...,
மெதுவாக தடவி வரும்
உணர்வுகள் புதையலாகும் ....!

கிழக்கு மாந்தர்களுக்கு
இச் சோதனை ...
வேதனை -
சிறியவர் முதல் பெரியவர் வரை ...!

டிசம்பர் மாதம் முழுவதும்
அடைமழையின் தாக்கம்
இயற்கை அழிவுகளும் ...
கஷ்டங்களும் .....
துன்பங்களும் ........,
தரிசிக்கும் வாழ்வு ...!

நொந்து வாழ்கிறோம் ..,
வெந்து .துடிக்கிறோம் ,
சந்தோசமில்லா மன நிலையில் ....
அடைக்கலாமில்லா உணர்வுகளில் ...
ஆனால் -
இழக்க மாட்டோம் ...பொறுமையை ...!

நோவினை வாழ்க்கை தான்
இந்த மண்ணின் மாந்தர்களுக்கு
,
மனங்களுக்கு வேதனை ..!..!சோதனை,....!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக