புதன், 21 டிசம்பர், 2011

துணையிழந்த தாலிக் கொடிகள்
வெந்து நொந்த படி
வாழ்க்கையற்று
தனிமையை சுவாசிக்கிறது!

தடவி மகிழும்
சதிகளை (விதிகளை)
மனதுக்குள் புதைந்து விட்டு
எதையோ இழந்த படி
சுவாசம் பெரும் மூச்சுவிட்டுப் போகிறது!

வரட்சிப் பூமியில் வெடித்துச் சிதறுகின்ற
புழுதிகளை
வியர்புடன் சுவாசித்தவாறு
வியாதியின் அவஸ்த்தையை உடம்பில் திணித்து
மரணப்படுக்கையில் கிடந்த போர்வை தட்டிச்
செல்கின்றது.

தன் தாகத்தின் "நா" வரட்சியை போக்கும்
ஊற்றுகளின்
கசிவுகளை மறைத்து அது
பாலைவனப் பூமியில்
கானலாய் மாறிப் போகிறது ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக