வெள்ளி, 30 டிசம்பர், 2011

கல்வித்தாய் அருள வேண்டும்...!



துள்ளி வரும் வெள்ளமென கல்வித் தாயே!
தூயமனத் துள்ளறிவை அள்ளித் தாவேன்
கள்ளமில்லா என் நெஞ்சில் கல்வித் தாயே!
காதலுடன் கலந்துயுர்வு பெற்றுத்தாவேன் ...!

ஏற்றமுடன் நான் செய்யும் பணியை சிலபேர்
இயலாமையால் இகலும் நிலையைக் கண்டேன்.
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து யானும்
தூய பணி புரிந்தவுடன் சுடரைத் தூவேன்...!

காலமெலாம் காசினிக்கு ஏற்றதாக
கனிவோடு பணி புரியக் கருணை செய்வாய்
சீல மோடு வாழ்ந்திங்கு தேவை மட்டும்
திருத்தமுடன் பணி புரிய அருளைத் தாவேன்...!

பொங்கி வரும் கல்விக்கு நிகரா யிந்தப்
பூதலத்தில் ஒரு செல்வம் வேறேதுண்டு
தங்க நிகர் கல்வித் தாய் அருள வேண்டும்...!
தரணியிலே தலை நிமிர்ந்து வாழவேண்டும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக