புதன், 21 டிசம்பர், 2011

 கல் மழைக் காட்டுக்குள்ளே
கொள்ளி பொறக்க போறபுள்ளே
நான் வந்து பார்க்கையிலே
கண்ணடிச்சுப் போணவளே ...!

கோணிக் கோணி மலையினிலே
நீ நடந்து போகையிலே
கால் தடுக்கி விழுந்ததினால்
நீ புரண்டு அழுதியாமே...!

கல் மழைக் காட்டுக்குள்ளே
சிக்குண்ட வேட்டியைப் போல்
உன் சோகம் கேட்டதிலே
என் மனசு இழியுதிங்கே ...!

உன் நினைவு மனசுக்குள்ளே
பாசியைப் போல் ஓட்டியதால்
தாம்பூலம் சப்பினாலும்
வெம்பிலையாகப் சுவைகிறது

உன்னைக்காண நாலை
கால் மணிக்கு பின் புறத்தே
விசிலோன்றின் சைகையுடன்
வருவேன் .,வா புள்ளே ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக