வெள்ளி, 30 டிசம்பர், 2011

அன்னை


பத்து மாதம் சுமந்தே என்னைப்
பரிவுடன் வளர்த்தவள் அன்னை
இத் தரை தன்னில் இவளரும் தியாகும்
எழுந்தே தொட்டிடும் விண்ணை !

கண்ணே !என்று இமையைப் போலவே
காத்திருப்பாள் இவள் நிதமே
பொன்னே என்றும் பூவே என்றும்
பொழியும் அன்போர் விதமே !

ஈயோடெறும்பு எதுவும் அணுகா(து )
இனிதாய்வளர்த்த உள்ளம்
தோயும் அன்புச் சுடராய் என்னைத்
துலங்க வைத்தாள் !உய்வோம் !

பள்ளிப் பாடம் சொலித் தந்தே
பண்பாய் அனுப்பி விடுவாள்
வெள்ளி பூத்தே விடியும் வானாய்
விளங்க அனைத்தும் விடுவாள் !

பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்
பாரினில் தூலங்க வைத்தாள்
தொட்டுப் பேசித் துணையாய் நிற்கும்
தூய உள்ளம் அன்னை !

உதிரம் தன்னைப் பாழாய் உதிர்த்து
ஊட்டிவளர்த்தவள் அன்னை
இதயத் தரையில் வாழும் உள்ளம்
இவளை மறவேன் மண்ணில் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக