புதன், 21 டிசம்பர், 2011

இதய மூச்சுக்களின் சுவாசமென
இப்போதுதான் புரிகிறது
அவளது பாசத்தில் ,
ஊற்றெடுக்கும் அன்புத் துளிகள்!

உறவாடுவது மன நிறைவுதானென்று
இப்போது தான் புரிகிறது
அவளது தூ ய்மையான,
நட்பின்
அரவணைப்பில் அக மகிழ்ந்து ..!

எதிகாலம் ,
மௌனமாய் மாறிய போது
இது தான் நற்புறவென்று
அணைத்தெடுத்து அவளால்
மகிழ வைத்தது நிகழ் காலங்கள் ..!

எல்லா மகிழ்வும் வளமும்
பற்றும் பாசமும் நலமும்
உறவும் தொடர்பும்
இருவரின் ஓர் இதயங்களில்
மனசுகளின் புரிதலில்
ஊற்றேடுக்கின்றன ..!
உதயமாகின்றன ...
பிறப்பெடுக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக