ஞாயிறு, 25 டிசம்பர், 2011

நிம்மதி எப்போது..?

ஒப்பந்தத்திற்கு
முன்னே-உள்ளங்கள்
அழுத்து வடித்தன....!

பின்னே
நிம்மதி கிடைக்கும்
என்று எதிர்பார்த்திருந்தவர்கட்கு
எத்தனை ஏமாற்றம்....?

அமைதி காக்க வந்த
படையினர்....
வெறும் பாராங்கற்களாய் வீதியில்.....!

இன்னும்-இங்கே
உயிர்ப் பலிகள்!

தினமும்-
பத்திரிகைகள் சுமர்ந்து வரும்
படு பாதகச் செயல்களைத் தான்
விழிகள் வாங்கிக்கொள்கிறது!

நிம்மதி மூச்சைச் சுவாசிக்கும்
ஒரு நேரத்துக்காக
எத்தனை காலங்கலாகக்
காத்திருக்கிறோம்!
அது-
எப்போது நம்மை நாடி வருமா....?
அல்லது
தேடி வருமா ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக