ஞாயிறு, 25 டிசம்பர், 2011

முற்றுப் பெறாத நிகழ்வு

துயர சுமக்க முடியாத மனசு
நொறுங்கி போகின்றன நினைவுகளால்..

பஞ்சுமெத்தையில் தலை சாய்த்தேன்
மின்னலாய் தோன்றி மறைந்தது கனவுகள்
நினைவுகளை -
இடிமுழக்கத்துக்குள் சமர்ப்பிக்கின்றேன்.
தென்றலோடு தென்றலாய் தடவுகிறேன்.

தொற்றிக் கொள்கின்ற சோதனைகள்
சாதிகளாய் -
விதிகளாய் -
மூச்சுக்களாய் -
சுவாசங்களாய் - மாறுகின்றன.

முற்றுப் பெறாத நிகழ்வு
மகிழ்ச்சிகளாய் மலராது.

தாகத்தின் தவிர்ப்பு
வரட்சியில் வடியும் வியர்வைகளோடு
கலந்திருக்கின்றன
சாஹாராப் பூமிக்குள் கசிந்திருக்கின்றது.

நாவெல்லாம் புலம்பல் நிறைந்த தாலாட்டு
சிந்திக்க வைக்கின்றது....
மேகங்கள் சூழப்பட்ட
கரு முகிலுக்குள் கலந்திருக்கிறேன்
புதைக்கப் பட்ட சடலமாய் சில சுமைகள் !

என் நினைவுகள்
நிழலாய் நிழலாடி
பட்டமரத்து கிளைகளினூடே
தென்றலாய் போகவே விரும்புகின்றேன்.

இல்லற வாழ்க்கையில் இனிமை சேரும் போது
வீட்டுக்குள் சந்தோஷம் வந்து நுழையும்

மனத்துயரத்தின் வேதனைத் தடவல்கள்
சுவாசக் காற்றோடு பறக்கின்றது......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக