புதன், 21 டிசம்பர், 2011

மச்சான் உங்கள் பார்வையில் கனிந்த
அன்பு தெரிகிறது ...காதல் ,
பித்தாய் எந்தன் பிஞ்சு மனது
பெரிதாய் விரிகிறது !

கண்கள் என்னும் கலையாலேந்தன்
கனியுடல் புன்படுதே ! காதல்
கொண்டேன் என்னைக் கனிவாய் வாழ்வில்
காத்திடக் கை கொடுவீர் !

வேலி இடுக்கால் விழிகளைப் பாச்சும்
வேதனை இனி வேண்டாம் ..கழுத்தில்
தாலி கட்டி தனிக் குடி நடத்தத்
தயாராய் வர வேண்டும் ..!

மாதர் தம்மை ஏய்ப்போர் இந்த
மண்ணில் பலருண்டு ..தூய
காதல் பூவைக் கசக்கும் தீ யோர்
கருகும் நிலை யுண்டு !

பெண்மை என்னும் பேரின்பத்தை
புரிந்தோர் உயர்வடைவார் ..வாழ்வில்
உண்மை இன்பம் கண்டே உய்ய
உடனே வர வேண்டும் மச்சான்
உடனே வர வேண்டும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக