வெள்ளி, 30 டிசம்பர், 2011

தோழி யென்றொரு அன்பு மலர் .இந்த
அவனியில் உதித்த பாசமலர் .!
என்னை நேசித்த இனிய மலர் ..ஒரு
இன்னலும் அணுகா (து)காக்கும் மலர் ..!

நண்பியாய் என்னை 'பெற்ற'மலர் ..எனை
துயரின்றி காக்கும் மலர் !
எத்தனையோ உறவைப் பெற்ற மலர் ..அவள்
என்றும் என்னுள்வாழும் பாசமலர் !

புன்னகை பூத்த புதிய மலர் ..ஒரு
புனிதமான கற்பு மலர் !
உண்மை நேசம் கொள்ளுமலர் ...ஒரு
உத்தமி யான பெண்மைமலர் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக