புதன், 21 டிசம்பர், 2011

உஷ்ணம் தீக் குளிக்கும் வெயிலில்
நா வரட்சியில் புழுவாய் துடிக்கும்.
பாதங்கள் நகரும் போது
வடியத் தொடங்குகிறது
வியர்வைத் துளிகள்.

ஆலமரத்து நிழல் தேடி
கலைப்பாருவதற்காய் இடம்மெடுத்து
ஆறுதலாய் உறங்குகிறது மனசு.

பசி அரிக்கும் வயிற்றில்
கரையான்களாய் ஊறுகின்றன குடல்கள்.
வறுமை போத்திய உணர்வுகளுக்கான
உணர்ச்சிக் கூறுகள்

இன்னும் வாழ்க்கை செழிக்காத கோலத்தில்
சிதறிக் கிடக்கும் என்னச் சுமைகள்
பட்டமரத்து இலைகளாய் உதிர்ந்து
போகின்றன.

உச்சி வெயிலில் என்னை
தடவிச் செல்லாத தென்றல் காற்று
கடல் அலைகளில் சங்கமிக்கின்றது......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக