புதன், 21 டிசம்பர், 2011

 சகீ ...
உன்னால்
என்
நகர்ந்த மூச்சுக்களை திருப்பி
மீண்டும்
சுவாசமாகத் தர முடிமா ...?

கடந்த காலத்தை
மீண்டும்
உன்னால் ...எனக்கு
திருப்பித் தர முடிமா ...?

புழுத்த பழத்தை
மீண்டும்
உன்னால் ...எனக்கு
காய்களாக்கித் தர முடிமா ...?

மறைந்த உயிரை
மீண்டும்
உயிராக்கித் தர முடிமா ...?

கடந்த பொழுதுகளை
மீண்டும்,
எடுத்துத் தர முடிமா ...?

குடித்த பாலை
மீண்டும்
சுரந்து தர முடிமா ...?

அப்படியாயின்
எப்படி ...
உன் மீது
நான் வைத்துள்ள
என் தூய
அன்பை -
புனிதமான் உறவை
திருப்பி பெற முடியும் ...!

மண்ணுக்குள்
இவ்வுடல் அடக்கம் செய்யப் பட்டாலும் கூ ட
உயிருக்குள் -
உறவாடும் உன் நினைவு
உறங்காது !
அடங்காது ..!
அது
என் நரம்புகளோடு
உணர்வுகளோடு...
சுவாசங்களோடு...
மூச்சுக்களோடு ...
குருதிகளோடு ...
நினைவுகளோடு ...
சிந்தனைகளோடு ...
கலந்து விட்டது ...!

அதனால்
வேறு படுத்திப் பார்க்க முடியாது ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக