ஞாயிறு, 6 ஜனவரி, 2013

நெஞ்சில் உதைக்கும் 
நினைவுகளின் தாக்கம்

விருப்பங்களால் விளையும்
உறவின் தாகங்கள்
தணியாது நடை போடும்

வாசல் தேடும்
வாலிப பராயங்கள்
நேசத்தோடு '
நெகிழ்வையே எண்ணி
நெஞ்சை வருடும்

சந்திப் ''பூ ;'க்கள்
சிந்திப் போகும்

மகுடந்த மது குடத்தின் '
தளம்பல்கள்
மகிழ்ச்சித் தாளம்
கக்கும்

வீரியம் மீறிய
தாபங்கள்
போடும் களியாட்டங்கள்
ஒரு பொழுதில்
ஒன்றாய் சேர
உதடுகள் ஒட்டி
உரிமையுடன் உலகை ஆளும்

அன்பின் அதுரமும்
அணைப்பின் அகலங்களும்
மூச்சோடு கலந்து
முழுமதி நிலை போல்
தனி சுகம் பறிக்கும்

ஒரு மலரின் தேடல்
கனவு எல்லைகளைக்
கடக்கக் கருவாகி
சுவடாய்ப் பதிந்திருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக