ஞாயிறு, 6 ஜனவரி, 2013

காலத்தின் வேகத்தோடு
சிக்குண்டு-
எங்கள் பயணம் தொடர்கிறது !

இதயங்களுக்குள் எழும்
இனிய ராகங்கள்
அதற்க்குள்ளே சமாதியாகி விட்டன

நாங்கள்
மலையாகப் பூமியின்
அப்பாவி பிறவிகள்
மலர்வுகளுக்கெல்லாம்
நாம் ஸ்நேகிதர் அல்ல
மலராமலே -
உதிர்ந்து கொண்டிருக்கிறோம்

எங்கள் இதயக்குமுறல்களை
வரிக்கு வரி எழுதினாலும்
வாய் விட்டே பேசினாலும்
கண்ணீர் விட்டே அழுதாலும்
வசந்தத்தின் வரவுகள்
கற்பனையில் மட்டும் தான் ,
உதயத்திலே அஸ்தமனம் .
காணும் உள்ளங்கள்
எம்முடையது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக